Published : 15 Aug 2016 04:56 PM
Last Updated : 15 Aug 2016 04:56 PM

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியா உள்ளிட்ட பகுதிகளில் கட்டிடங்களில் அதிர்வுகள் ஏற்பட்டன.

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டு நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 5.6 ஆகப் பதிவானது. இதனால் தலைநகர் டோக்கியோ உட்பட பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் லேசாக குலுங்கின.

நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறிகள் இல்லை என்று அந்த நாட்டு புவியியல் மையம் அறிவித்தது. எனினும் வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில் அடுத்தடுத்து லேசான நிலஅதிர்வுகள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2011 மார்ச் 11-ம் தேதி இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். சுனாமி தாக்குதலால் புகிஷிமா அணு மின் நிலையத்தில் அணுக் கசிவு ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x