Published : 21 Mar 2017 06:58 PM
Last Updated : 21 Mar 2017 06:58 PM
அமெரிக்காவில் உள்ள மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் ஒருவரை நியமித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
கென்டகி மாகாணத்தின் கிழக்கு மாவட்ட நீதிபதியாக இந்திய-அமெரிக்கரான அமுல் தாப்பர் (47) கடந்த 2007-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதன்மூலம் அதிகாரம் மிக்க நீதிமன்றங்களின் (ஆர்டிகிள் 3) நீதிபதி பதவியை பிடித்த முதல் தெற்கு ஆசியர் என்ற பெருமை கிடைத்தது.
இந்நிலையில், மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக தாப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு நீதித் துறையில் இந்தியருக்கு உயர் பதவி வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
இந்த நியமனத்துக்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் வழங்கினால், தாப்பர் அமெரிக்காவின் அதிகாரம் மிக்க 6-வது சர்க்யூட் மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் ஒரு அங்கமாகி விடுவார். கென்டகி, டென்னிசி, ஓஹியோ மற்றும் மிச்சிகன் ஆகிய மாகாணங்களின் மேல் முறையீட்டு வழக்குகளை இந்த நீதிமன்றம் விசாரிக்கும்.
2007-ல் நீதிபதியாக பதவியேற்பதற்கு முன்பு கென்டகி மாகாணத்தின் கிழக்கு மாவட்ட அரசு வழக்கறிஞராக தாப்பர் பணியாற்றி உள்ளார். இவரது நியமனத்தை வடஅமெரிக்காவின் தெற்கு ஆசிய வழக்கறிஞர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. இந்த சங்கத்தின் முன்னோடி விருதை தாப்பர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் விச்சால் குமார் கூறும்போது, “நீதிபதி தாப்பர் மிகவும் திறமையானவர். தெற்கு ஆசியர்களுக்கு முன்னுதாரணமாக அவர் விளங்குகிறார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT