Last Updated : 31 Aug, 2016 09:17 AM

 

Published : 31 Aug 2016 09:17 AM
Last Updated : 31 Aug 2016 09:17 AM

இந்திய ஆன்மிக குரு சின்மயா பிறந்தநாள்: 72 ஆயிரம் மெழுகுவர்த்தி ஏற்றி உலக சாதனை

இந்திய ஆன்மிக குருவான சின்மயா குமார் கோஸின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சீடர்கள் கேக் மீது 72 ஆயிரம் மெழுகுவர்த்திகளை ஏற்றி உலக சாதனை படைத்துள்ளனர்.

இந்தியாவில் பிறந்த சின்மயா அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு தியானம் மற்றும் யோகா பயிற்சி களை கற்றுக்கொடுத்து வந்த இவர் 2007-ல் உயிரிழந்தார். கடந்த 27-ம் தேதி நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில் சின்மயாவின் 85-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

கின்னஸ் உலக சாதனை நாயக னான அஷ்ரிதா பர்மன் (61) மற்றும் சின்மயாவின் சீடர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் 45 அடி நீளம் மற்றும் 10 அடி அகலம் கொண்ட கேக்கின் மீது ஒரே நேரத் தில் 72 ஆயிரம் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. இந்த மெழுகுவர்த்தி களை எண்ணி கேக்கில் சொருகும் பணியில் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இது உலக சாதனை யாகக் கருதப்படுகிறது.

இதற்கு முன்பு, பர்மன் 48 ஆயிரம் மெழுகுவர்த்திகளை ஏற்றி சாதனை படைத்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 50 ஆயிரம் மெழுகு வர்த்திகளை ஏற்றிய மற்றொரு குழுவினர் இந்தச் சாதனையை முறியடித்தனர். இப்போது அதை பர்மன் முறியடித்துள்ளார்.

இதுவரை 622 கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளார் பர்மன். இதில் பல சாதனைகள் இதுவரை முறியடிக்கப்பட வில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x