Published : 10 Oct 2013 10:33 AM
Last Updated : 10 Oct 2013 10:33 AM

துப்பாக்கி முனையில் லிபிய நாட்டுப் பிரதமர் கடத்தல்

லிபிய நாட்டுப் பிரதமர் அலி செய்டான் கடத்தப்பப்ட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.

அந்நாட்டு, அரசு இணையதளத்தில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், எதற்காக யாரால் கடத்தப்பட்டார் என்பது தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கடத்தலில் ஈடுபட்டவர்கள், முன்னாள் போராளிகளாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் அலி செய்டான், ஜெனிவாவில் மனித உரிமை வழக்கறிஞராக பணியாற்றினார். கடந்த 2012ம் ஆண்டு நவம்பரில் லிபிய பிரதமராக பொறுப்பேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x