Published : 23 May 2017 03:54 PM
Last Updated : 23 May 2017 03:54 PM
அமெரிக்காவில் 30,000க்கும் அதிகமான இந்தியர்கள் தங்களுடைய விசா காலம் முடிவடைந்தும் தங்கியிருப்பதாக அந்நாடு கூறியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்புத் துறை அந்நாட்டு நாடாளுமன்றத்திடம் அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் தொழில், சுற்றுலா, கல்வி என பல்வேறு துறை சார்ந்து பயணம் மேற்கொண்ட இந்தியர்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்கள் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் தங்கியிருப்பதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இப்புதிய அறிக்கையில் அமெரிக்க குடியுரிமை பெறாமல் அங்கு தங்கிய 96% வெளிநாட்டுப் பயணிகள் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆம் ஆண்டு மட்டும், 5 கோடி பேருக்கு விசா காலம் முடிவடைந்தது. இதில் பத்து லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களும் அடங்குவர்.
இவர்களில் 30,000 பேர் விசா காலம் முடிவடைந்த நிலையிலும் அமெரிக்காவிலேயே தங்கியுள்ளதாகவும், மேலும் 6,000 பேர் தங்களது விசா காலம் முடிவடைந்த பின்னரே அமெரிக்காவிலிருந்து அவர்கள் நாட்டுக்குச் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள்
இந்திய மாணவர்களில் 9,897 பேர் 2016-ம் ஆண்டு இறுதியில் விசா காலம் முடிவடைந்து அமெரிக்காவிலிருந்து புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களில் 4,545 பேர் விசா காலம் முடிவடைந்தும் சட்டத்துக்கு புறம்பான முறையில் அமெரிக்காவில் தங்கியுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT