நேபாளத்தில் வேன் விபத்து: 20 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் வேன் விபத்து: 20 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

காத்மாண்டு: நே​பாளத்​தின் ரோல்பா பகு​தி​யில் 800 மீட்​டர் ஆழ பள்​ளத்​தில் வேன் கவிழ்ந்து நேற்று ஏற்​பட்ட விபத்​தில் 20 பக்​தர்​கள் பரிதாபமாக உயி​ரிழந்​தனர்.

நேபாளத்​தின் இமய மலை​யில் சுமார் 4,580 மீட்​டர் உயரத்​தில் ரோல்பா நகர் அமைந்​துள்​ளது. அங்​குள்ள புகழ்​பெற்ற இந்து கோயி​லில் வழிபடு​வதற்​காக ரூகம்​கோட் பகு​தி​யில் இருந்து சுமார் 20 பக்​தர்​கள் ஒரு வேனில் சென்று கொண்​டிருந்​தனர். அவர்​களின் வேன், தவாங் பகு​தி​யில் சென்​ற​போது கட்​டுப்​பாட்டை இழந்து 800 மீட்​டர் ஆழ பள்​ளத்​தில் கவிழ்ந்​தது. இதில் 20 பேர் உயி​ரிழந்​தனர்.

இதுகுறித்து உள்​ளூர் போலீஸ் இன்​ஸ்​பெக்​டர் சுனில் தபா கூறும்​போது, “முதல்கட்ட விசாரணையில் சிறிய வேனில் அதிக எண்​ணிக்​கையி​லான பக்​தர்​கள் பயணம் செய்​தது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்​களாக மழை பெய்து வரு​கிறது. இதன்​காரண​மாக சாலை​யோர பள்​ளத்​தில் வேன் கவிழ்ந்​திருக்​கிறது. உள்​ளூர் மக்​களின் உதவி​யுடன் மீட்​புப் பணி நடை​பெற்று வரு​கிறது. உயி​ரிழந்தவர்களின் விவரங்​கள் உடனடி​யாக தெரிய​வில்​லை" என்றார்​.

நேபாளத்தில் வேன் விபத்து: 20 பேர் உயிரிழப்பு
கிரெடிட் கார்டு பயனர்களுக்கு நிம்மதி: நிலுவைத் தொகை செலுத்த 3 நாட்கள் சலுகை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in