Last Updated : 02 Jan, 2016 09:55 AM

 

Published : 02 Jan 2016 09:55 AM
Last Updated : 02 Jan 2016 09:55 AM

பாகிஸ்தானில் 9 தீவிரவாதிகளுக்கு தூக்கு உறுதி

தீவிரவாத குற்றங்களுக்காக 9 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் தலைமை தளபதி ரஹீல் ஷெரீப் நேற்று உறுதி செய்தார்.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைமையகத்தின் மீது தாக்குதல் தொடுத்தது உட்பட பல்வேறு குற்றங்களுக்காக 9 தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. இதனை ராணுவ தலைமை தளபதி ரஹீஷ் ஷெரீப் உறுதி செய்தார்.

நான்கு நாட்களுக்கு முன்பு நான்கு தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், 9 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் தீவிரவாதி முகமது காவ்ரி, ஹர்கதுல் ஜிகாத் இ இஸ்லாம் தீவிரவாதி அப்துல் கயூம், அல்-காய்தா தீவிரவாதி அக்சன் மெகபூப், ஸன்னி பிரிவினைவாத அமைப்பான சிபா இ சஹாபா பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேர் ஆகிய 9 பேருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x