பிரிட்டன் மகாராணி சம்பளம் 8 % உயர்வு

பிரிட்டன் மகாராணி சம்பளம் 8 % உயர்வு
Updated on
1 min read

வரும் 2018-19ம் நிதியாண்டில் பிரிட்டன் மகாராணி 2-வது எலிசெபத் தனது செலவுகளை சமாளிக்க வசதியாக அவரது சம்பளம் 8 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அவரது சம்பளம் ரூ.680 கோடியாக இருக்கும் என பிரிட்டன் அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டன் மகாராணி 2-வது எலிசெபத்துக்காக பணியாற்றும் ஊழியர்கள், அவரது பயண செலவுகள் ஆகியவற்றுக்கான ஊதியம் மற்றும் செலவினங்கள் வழங்குவதற்காக தனிச் சட்டம் மூலம் பிரிட்டன் அரசு சார்பில் நிதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2018-19-ம் ஆண்டில் எலிசெபத் தனது செலவுகளை சமாளித்துக் கொள்ளும் வகையில் அவருக்கான அந்த சம்பள நிதி 8 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரிட்டன் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், ‘‘மகாராணியின் அலுவல்பூர்வமான செலவுகள், பொது நிதியில் இருந்து செலவிடப்படுகின்றன. இதற்கு மாற்றாக கிரவுன் எஸ்டேடின் வருமானத்தை அரசிடம் மகாராணி வழங்கி வருகிறார்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in