Published : 05 Jul 2016 10:24 AM
Last Updated : 05 Jul 2016 10:24 AM

இராக்கில் பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு

இராக் தலைநகர் பாக்தாதில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண் ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.

ரம்ஜானை முன்னிட்டு பாக் தாதில் உள்ள காராடா சந்தையில் நேற்றுமுன்தினம் பெருந்திரளான பொதுமக்கள் பண்டிகைக்கான பொருட்களை வாங்கிக் கொண் டிருந்தனர். அப்போது வெடி குண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்த தற்கொலைப் படை தீவிரவாதி சந்தையின் மையப் பகுதியில் வெடித்துச் சிதறினான். இதில் 125 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 75 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 200-ஐ எட்டி யுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x