Published : 20 Jun 2017 09:40 AM
Last Updated : 20 Jun 2017 09:40 AM
கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 6 கோடியே 56 லட்சம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
சிரியா, ஏமன், இராக், ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான் உட்பட பல்வேறு நாடுகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக அந்த நாட்டு மக்கள் அகதிகளாக வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். அதன்படி கடந்த 2016-ம் ஆண்டில் 6 கோடியே 56 லட்சம் பேர் அகதிகளாக வேறுநாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் சென்றுள்ளனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா.சபையின் அகதிகளுக்கான ஆணையர் பிலிப்போ கிராண்டி கூறிய தாவது: உலகில் அமைதியை ஏற்படுத்துவது மிகவும் கடினமாகி விட்டது. புதிய பிரச்சினைகள், குழப்பங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.
கடந்த ஆண்டில் தெற்கு சூடானைச் சேர்ந்த 3.40 லட்சம் பேர் அண்டை நாடான உகாண்டாவில் தஞ்சமடைந்துள்ளனர். சிரியாவைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட் டோர் பல்வேறு நாடுகளுக்கு அகதி களாக சென்றுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT