Published : 06 Jul 2016 10:10 AM
Last Updated : 06 Jul 2016 10:10 AM
பதவி விலகும் பேச்சுக்கே இட மில்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல் கடந்த 2-ம் தேதி நடை பெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் சுதந்திர தேசிய கூட்டணியின் வேட்பாளரும் பிரதமருமான மால் கம் டர்ன்புல்லுக்கும் தொழிலாளர் கட்சியின் வேட்பாளர் பில் ஷார்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேர்தல் தோல் விக்குப் பொறுப்பேற்று பிரதமர் மால்கம் டர்ன்புல் பதவி விலக வேண்டும் என்று தொழிலாளர் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இதுகுறித்து பிரதமர் மால்கம் டர்ன்புல், கான்பெர்ரா நகரில் நிருபர்களிடம் நேற்று கூறியபோது, நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் பெரும்பான் மை பலத்தை பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT