Published : 07 Aug 2016 09:10 AM
Last Updated : 07 Aug 2016 09:10 AM
சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் மனிதஉரிமை ஆர்வலர்கள் 4 பேருக்கு அண்மையில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சூயாங், பெய்ஜிங்கில் நேற்று கூறியதாவது:
சீனாவின் உள்விவகாரம், நீதித் துறையின் செயல்பாட்டில் அமெரிக்கா தலையிடுவது ஏற்கத்தக்கது அல்ல. அரசியல் உள்நோக்கத்துடன் அமெரிக்கா செயல்படுகிறது. சீனாவின் தேசிய பாதுகாப்பு, சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT