

சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் மனிதஉரிமை ஆர்வலர்கள் 4 பேருக்கு அண்மையில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சூயாங், பெய்ஜிங்கில் நேற்று கூறியதாவது:
சீனாவின் உள்விவகாரம், நீதித் துறையின் செயல்பாட்டில் அமெரிக்கா தலையிடுவது ஏற்கத்தக்கது அல்ல. அரசியல் உள்நோக்கத்துடன் அமெரிக்கா செயல்படுகிறது. சீனாவின் தேசிய பாதுகாப்பு, சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.