Published : 09 Apr 2017 08:08 AM
Last Updated : 09 Apr 2017 08:08 AM

சுவீடனில் தாக்குதல் நடத்தியவர் ஐஎஸ் ஆதரவாளர்

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மக்கள் மீது லாரியை மோதி தாக்குதல் நடத்திய மர்ம நபர் ஐ.எஸ். ஆதரவாளர் என்பது தெரியவந்துள்ளது.

ஸ்டாக்ஹோம் புறநகர்ப் பகுதியில் நேற்றுமுன்தினம் ஒரு சரக்கு லாரியை கடத்திய மர்ம நபர், மக்கள் கூட்டத்தில் மோதினான். இதில் 4 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 39 வயது நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்தான் லாரியை ஓட்டி வந்த மர்ம நபர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சுவீடனில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி அவர் தனது சமூக வலைதளத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பான வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். அவருக்கு மனைவி, 4 குழந்தைகள் இருப்பதாகவும் அவர்கள் உஸ்பெகிஸ்தானில் வசிப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபருக்கும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x