Last Updated : 06 Jun, 2017 01:01 PM

 

Published : 06 Jun 2017 01:01 PM
Last Updated : 06 Jun 2017 01:01 PM

பாகிஸ்தான் அண்டை நாடுளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது: அமெரிக்கா

பாகிஸ்தான் அதன் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இதுகுறித்து திங்கட்கிழமை அமெரிக்கா சிந்தனையாளர்கள் குழு தரப்பில், "தாலிபன்கள் மற்றும் ஆப்கானிலுள்ள தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவுகிறது. இதன் காரணமாக மோசமான பொருளாதார சூழலுக்கு ஆப்கானிஸ்தான் உள்ளாக்கப்படும்.

பாகிஸ்தான் தனது அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தீவிரவாதிகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ளாவிட்டால். அந்நாட்டுக்கு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதிக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக பாகிஸ்தான் தீவிரவாதத்தை தடுக்கத் தவறிவிட்டது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்கள் அந்த பிராந்தியத்தில் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்கள் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனர் டேனியல் கோட்ஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x