இந்தோனேஷிய கனமழை, நிலச்சரிவு பலி 43 ஆக அதிகரிப்பு

இந்தோனேஷிய கனமழை, நிலச்சரிவு பலி 43 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

இந்தோனேஷியாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. 19 பேரை காணவில்லை.

இது குறித்து இந்தோனேஷியாவின் பேரிடர் மேலாண்மை அமைச்சக செய்தி தொடர்பாளர் சுடோபோ புர்வோ கூறும்போது, "இந்தோனேஷியாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 43-ஆக அதிகரித்துள்ளது. 19 பேரை காணவில்லை. 14 பேர் காயமடைந்துள்ளனர். .

பூர்வஜோ, பஞ்சார்னெகரா, கெபுமென் ஆகிய பகுதிகள் மோசமாக பாதிப்படைந்துள்ளன.

மத்திய ஜாவா முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவு காரணமாக மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் வெள்ளத்திலும், நிலச்சரிவில் சிக்கி உயிருடன் தவிப்பவர்களை மீட்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in