Published : 14 Mar 2017 11:01 AM
Last Updated : 14 Mar 2017 11:01 AM
அமெரிக்கா மீது அணுஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அணுஆயுதங்கள், ஏவுகணை சோதனைகளை வடகொரியா அடிக்கடி நடத்தி வருகிறது. அந்த நாட்டின் அச்சுறுத்தலை சமாளிக்க தென்கொரியாவில் ஏவுகணை தடுப்பு சாதனங்களை அமெரிக்கா அமைத்துள்ளது. மேலும் அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்ட போர் விமானங் களையும் தென்கொரியாவில் அமெரிக்கா நிறுத்திவைத்துள் ளது.
இந்நிலையில் வடகொரிய அரசு ஊடகத்தில் நேற்று வெளி யான கட்டுரையில் கூறியிருப்ப தாவது: தென்கொரியாவில் அமெரிக்கா ஆயுதங்களைக் குவித்து வருகிறது. இதனால் அணுஆயுத போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வடகொரியாவை மட்டும் அமெரிக்கா குறிவைக்கவில்லை. ரஷ்யா, சீனாவை கருத்திற் கொண்டே தென்கொரியாவில் ஏவுகணை தடுப்பு சாதனங்களை அந்த நாடு நிறுவியுள்ளது.
வடகொரியாவின் இறையாண் மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அமெரிக்கா, தென்கொரியா மீது அணுஆயுத தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்.
இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வடகொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக அதிநவீன ஆளில்லா போர் விமானங்களையும் தென்கொரியாவில் அமெரிக்கா குவித்து வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT