Last Updated : 27 Apr, 2017 03:02 PM

 

Published : 27 Apr 2017 03:02 PM
Last Updated : 27 Apr 2017 03:02 PM

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய திட்டம்

வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகள் நடத்திவரும் நிலையில் அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா புதிய வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் புதன்கிழமையன்று பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "தொடர்ந்து வடகொரியா நடத்திவரும் ஆணுஆயுத ஏவுகணை சோதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அந்நாட்டை பேச்சுவார்த்தைப் பாதையில் கொண்டுவர வேண்டும். மேலும் அணுஆயுத சோதனைகளுக்கு எதிராக அதன் மீது பொருளாதாரத் தடை சார்ந்த நடவடிக்கைகளில் அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய திட்டங்களை வகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வடகொரியா 6-வது அணுஆயுத சோதனைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அந்நாடு அணுஆயுத சோதனை நடத்தினால் அதன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்ததது. இதனால் கொரிய தீபகற்பப் பகுதியில் போர் பதற்றம் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x