Published : 25 Jun 2017 09:40 AM
Last Updated : 25 Jun 2017 09:40 AM

இந்தியா - போர்ச்சுகல் இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று போர்ச்சுகல் தலை நகர் லிஸ்பன் சென்றார். அங்கு அந்த நாட்டு பிரதமர் அந்தோனியோ கோஸ்டாவை சந்தித்துப் பேசினார்.

அப்போது இரு நாடுகளுக்கும் இடையே தீவிரவாத தடுப்பு, விண் வெளி ஆராய்ச்சி, பருவ நிலை ஆராய்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரதமர் நரேந்திர மோடி பேசிய போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக போர்ச்சுகல் ஆதரவு அளிப்பதற்கு நன்றி. தீவிரவாதத்தை வேரறுப்பதில் இருநாடுகளும் இணைந்து செயல்படும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x