Last Updated : 05 Oct, 2014 12:19 PM

 

Published : 05 Oct 2014 12:19 PM
Last Updated : 05 Oct 2014 12:19 PM

சாத்தான் மீது கல்லெறியும் சடங்கு: 20 லட்சம் பேர் பங்கேற்பு

சவுதி அரேபியாவில் ஹஜ் பயணத்தை மேற்கொண்டுள்ள 20 லட்சம் முஸ்லிம்கள், மினா நகரில் நடைபெற்ற சாத்தான் மீது கல்லெறியும் சடங்கில் நேற்று பங்கேற்றனர்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள், சவுதி அரேபியா வுக்கு ஹஜ் பயணம் மேற்கொண் டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக மெக்காவிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள மினாவில் நடைபெற்ற சாத்தான் மீது கல்லெறியும் சடங்கு நேற்று நடந்தது.

இதற்காக அராபத் மலையிலி ருந்து 20 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், மினாவுக்கு நேற்று வந்தனர். வரும் வழியில் கூழாங் கற்களை எடுத்து வந்து, மினாவில் அமைக்கப்பட்டுள்ள தூண்கள் மீது வீசினர். பின்னர், விலங்குகளை அர்ப்பணித்து தங்களின் ஹஜ் பயணத்தை நிறைவு செய்தனர். இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் வரும் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக நிறைவுக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x