Published : 11 Oct 2014 05:16 PM
Last Updated : 11 Oct 2014 05:16 PM

2-வது ஒரு நாள் போட்டி: ரெய்னா, கோலி அரைசதம்

டெல்லியில் நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய பேட்ஸ்மென்கள் ரெய்னா, கோலி இருவரும் அரைசதம் எடுத்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இந்தியா 35 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது.

ரெய்னா 54 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்தும் கோலி 68 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தும் விளையாடி வருகின்றனர்.

பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு கோலி அரைசதம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது டெஸ்ட், அல்லது ஒருநாள் போட்டிகள் என்ற அடிப்படையில் பிப்ரவரிக்குப் பிறகு அரைசதம் எடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x