Published : 21 Aug 2016 01:12 PM
Last Updated : 21 Aug 2016 01:12 PM
பாகிஸ்தான் எல்லைச் சாவடியில் ஆப்கானிஸ்தான் இளைஞர்கள் ஒன்று திரண்டு பாகிஸ்தான் தேசிய கொடியை தீ வைத்து எரித்தனர். இதனால் இருநாட்டு எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ் தானுக்கும் இடையே நீண்டகால மாக மோதல் போக்கு நீடிக்கிறது. கடந்த 19-ம் தேதி ஆப்கானிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்போது சாமன் எல்லைச் சாவடியில் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் இளைஞர்கள் ஒன்றுதிரண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிட்டனர். சிலர் பாகிஸ்தான் தேசிய கொடிகளை தீ வைத்து எரித்தனர்.
எல்லைச் சாவடியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ அலுவலகத் தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் இருநாட்டு எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரி கூறியபோது, சாமன் எல்லை மூடப்பட்டுள்ளது. இந்த வழியாக எவ்வித போக்கு வரத்துக்கும் அனுமதி அளிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
சாமன் எல்லை வழியாக நாள் தோறும் 15 ஆயிரம் சரக்கு லாரிகள் கடந்து செல்லும். அவை நிறுத்தப் பட்டுள்ளதால் இருநாடுகளுக்கும் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT