Published : 02 Feb 2014 05:27 PM
Last Updated : 02 Feb 2014 05:27 PM

இலங்கையில் பெண் பத்திரிகையாளர் மெல் குணசேகர கொலை

இலங்கையின் குறிப்பிடத்தக்க பெண் பத்திரிகையாளர் மெல் குணசேகர (வயது 40) குத்திக் கொல்லப்பட்டார்.

கொழும்புவில் உள்ள அவரது இல்லத்தில், ஆயுதத்தால் குத்தப்பட்ட நிலையில் மெல் குணசேகரவின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது.

மெல் குணசேகரன் கொல்லப்பட்டது தொடர்பான தகவலை செய்தியாளர்களிடம் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ரஜித் ரோஹனா வெளியிட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் போர்க் காலத்தில், அங்கிருந்தபடி சர்வதேச செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பிக்கு செய்தியாளராக மெல் குணசேகர பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெல் குணசேகர கொல்லப்பட்டதற்கான பின்னணி விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை என்று இலங்கையைச் சேர்ந்த பத்திர்கையாளர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x