Published : 06 Jun 2017 08:41 AM
Last Updated : 06 Jun 2017 08:41 AM

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு 6 தொழிலாளர் பலி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஆர்லாண்டாவின் நார்த் பார்சித் சாலையில் பல்வேறு ஆலைகள் செயல்படுகின்றன. அங்குள்ள ஓர் ஆலையில் நேற்று தொழிலாளர்களுக்கு மத்தியில் சண்டை ஏற்பட்டது. இதில் இருதரப்பினர் துப்பாக்கியால் சுட்டதில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

எதற்காக சண்டை நடைபெற்றது, யார், யார் துப்பாக்கியால் சுட்டார்கள் என்பது தெரியவில்லை. மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை. சண்டைக்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x