Published : 09 Sep 2016 10:23 AM
Last Updated : 09 Sep 2016 10:23 AM

வடகொரியா 5-வது முறையாக அணுகுண்டு சோதனை: ஹிரோஷிமாவில் வீசப்பட்டதை விட சக்தி வாய்ந்தது

வெற்றிகரமாக அணுகுண்டு சோதனை நடத்தியதாக வட கொரியா அறிவித்துள்ளது. இதற்கு தென்கொரியா மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த அணுகுண்டு இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமா நகர்மீது வீசப்பட்டதை விட சக்தி வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.

ராக்கெட்டில், அணு ஆயுதத்தை சிறியதாக மாற்றிப் பொருத்தும் தொழில்நுட்பத்தில் வெற்றிகரமாக இலக்கை எட்டியிருப்பதாக, வடகொரிய அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

“எங்களின் விஞ்ஞானிகள், புதி தாக உருவாக்கப்பட்ட அணு ஆயு தத்தை, நாட்டின் வடக்குப் பக்கத் தில் உள்ள அணு ஆயுத பரிசோ தனைக் களத்தில் வெடிக்க வைத்து சோதனை செய்தனர். விஞ்ஞானி களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட் டுள்ளது. 10 கிலோ டன் அளவுள்ள இந்த அணுகுண்டு வெடிப்பு, வட கொரியாவின் மிகப்பெரிய அணு ஆயுத சோதனையாகும்” என வட கொரிய டிவியில் தெரிவிக்கப்பட் டுள்ளது. “இந்த அணு ஆயுத சோதனை நடந்த இடத்தில் ஏற்பட்ட அதிர்வுகள் ரிக்டர் அளவு கோலில் 5.3 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. இது வடகொரியாவின் நான்காவது அணு ஆயுதச் சோதனையை விட இரு மடங்கு அதிகம். அமெரிக் காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த மிடில்பரி சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தைச் சேர்ந்த ஜெஃப்ரி லூயிஸ் கூறும்போது, “வடகொரியா அணு ஆயுத சோதனைகளின் நிலஅதிர்வு வீச்செல்லை 20-30 கிலோ டன் அளவுக்கு இருக்கும். இது, இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டை விட சக்தி வாய்ந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா எச்சரிக்கை

வடகொரியாவின் அணுகுண்டு சோதனைக்கு அமெரிக்கா கண்ட னம் தெரிவித்துள்ளது. “இதன் பின் விளைவுகளை வடகொரியா சந் திக்க நேரிடும்” என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித் துள்ளார். ஜப்பான் மற்றும் தென் கொரிய தலைவர்களுக்கு இது தொடர்பாக விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் இந்த செயல் பைத்தியகாரத்தனமானது, பொறுப்பற்றது என தென்கொரிய அதிபர் பார்க் கியூன் ஹை விமர்சித்துள்ளார்.

“இதன் மூலம் வடகொரியா கிம் ஜாங் உன் ஆட்சிக்காலத்தில் மேலும் தடைகளையும் தனிமைப் படுத்தலையும் எதிர்கொள்வதைத் தவிர வேறு எதையும் சாதிக்க முடி யாது. மேலும் இத்தகைய தூண்டு தல் நடவடிக்கை அந்நாட்டை சுய அழிவை நோக்கி வேகமாக முடுக்கி விட்டுள்ளது. வட கொரியா மீது இன்னும் வலுவான தடைகளை வலியுறுத்துவோம்” என பார்க் கியூன் ஹை தெரிவித்துள்ளார்.

சீனா எதிர்ப்பு

சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறும்போது, “வடகொரி யாவுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அணு ஆயுதக் குறைப்பு தீர்மானத்துக்கு வடகொரியா உரிய மரியாதை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x