Published : 16 Jun 2017 05:04 PM
Last Updated : 16 Jun 2017 05:04 PM
கொலம்பியாவில் ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்த பயிற்சி செவியலியர் ஒருவர் மருத்துவர் மீது விழுந்தததால் உயர் தப்பினார். ஆனால் அம்மருத்துவர் உயிரிழந்துவிட்டார்.
கொலம்பியாவில் உள்ள காலி நகரில் உள்ள மருத்துவமனை ஆறாவது மாடியிலிருந்து பயிற்சி செவிலியர் மரியா இசபெல் கொன்செலெஸ் கீழே விழுந்துள்ளார். ஆனால் அவ்வழியாக நடந்து சென்ற பயிற்சி மருத்துவர் இசபெல் மூனுஸ் மீது விழுந்துள்ளார். இதில் மருத்துவர் மூனுஸ் பலத்த காயமடைந்து மரணம் அடைந்தார். பயிற்சி செவிலியர் மரியா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, செவிலியர் மரியா எதற்காக ஆறாவது மாடியிலிருந்து விழுந்தார் என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
மருத்துவர் மூனுஸ் உணவகத்துக்கு செல்லும் வழியில் பயிற்சி செவிலியர் அவர் மீது விழுந்ததாகவும், அவரது உயிரை காப்பற்ற பல முயற்சிகள் எடுத்தும் மருத்துவரின் மூளை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT