Published : 07 Nov 2013 11:08 AM
Last Updated : 07 Nov 2013 11:08 AM

அமெரிக்காவில் துப்பாகி சூடு: 3 பேர் பலி

அமெரிக்காவில் டெட்ராயிட் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர், 6 பேர் படுகாயமடைந்தனர்.

டெட்ராயிட் மாகாணத்தில் நகரின் கிழக்குபகுதியில் முக்கிய சாலையில் உள்ள ஒரு முடிதிருத்தும் நிலையம் அருகே துப்பாகி சூடு நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டெட்ராயிட் மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் கெல்லி மைனர் கூறுகையில்: மாலை 6 மணியளவில் நடந்த இந்த துப்பாகி சூட்டில் முடிதிருத்தும் நிலையத்தில் இருந்த 9 பேர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 2 பேர் மட்டும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த துப்பாக்கி சூடுக்கு யார் காரணம் என்பது தெரியவில்லை. மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x