இலங்கையில் பத்திரிகை ஆசிரியர் கொல்லப்பட்ட வழக்கு: 7 ஆண்டுக்குப் பின் உடல் தோண்டி எடுப்பு

இலங்கையில் பத்திரிகை ஆசிரியர் கொல்லப்பட்ட வழக்கு: 7 ஆண்டுக்குப் பின் உடல் தோண்டி எடுப்பு
Updated on
1 min read

இலங்கையில் ராஜபக்ச அதிபராக பதவி வகித்த காலத்தில் மர்ம மான முறையில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்கே உடலை மீண்டும் தோண்டியெடுத்து புதிதாக விசாரணை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவரின் உடல் 7 ஆண்டுகளுக்குப் பின் நேற்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

இலங்கையில் ‘சண்டே லீடர்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்தவர் லசந்தா விக்ரமதுங்கே. ராஜபக்சே அதிபராக இருந்த காலத்தில் நடந்த அநியாயங்களுக்கு எதிராக இவர் செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் கடந்த 2009, ஜனவரி 8-ம் தேதி கொழும்புவின் புறநகர் பகுதியான அதிதியாவில் விக்ரமதுங்கே மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந் தார். அதற்குமுன் பத்திரிகை தலையங்கத்தில் ராஜபக்ச அரசால் தனது உயிருக்கு அச்சுறுத் தல் இருப்பதாக விக்ரமதுங்கே குறிப்பிட்டிருந்ததால், அவரது மரணம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யிருந்தது.

மைத்ரிபால சிறிசேனா புதிய அதிபராக பதவியேற்றதும், விக்ரம துங்கே கொலை வழக்கையும் தூசு தட்டும்படி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து கடந்த ஜூலை மாதம் இந்தக் கொலை வழக்கு தொடர்பாக ராணுவ உளவு அதிகாரி ஒருவர் முதல்முறையாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக புறநகர் மவுண்ட் லாவினியா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படை யில் கொழும்பு மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த விக்ரம துங்கேவின் உடல் நேற்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

இது குறித்து விக்ரமதுங்கே குடும்ப வழக்கறிஞர் அதுலா எஸ்.ரானாகலா கூறும்போது, ‘‘தடயவியல் பரிசோதனையின் ஒரு அறிக்கையில் விக்ரமதுங்கேவின் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த காயங்கள் இருந்ததாகவும், மற்றொரு அறிக்கையில் கத்தியால் குத்திய காயங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த முரண்பட்ட தகவலால் மருத்துவர்கள் குழு, புதிதாக பிரேத பரிசோதனை நடத்தவுள்ளனர்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in