ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் அதிபர் ஒபாமா: கண்கலங்கினார் துணை அதிபர் பிடேன்

ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் அதிபர் ஒபாமா: கண்கலங்கினார் துணை அதிபர் பிடேன்
Updated on
1 min read

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆட்சிக் காலம் வரும் 20-ம் தேதி யுடன் நிறைவடைகிறது. அவரோடு 8 ஆண்டுகள் துணை அதிபராக ஜோ பிடேன் பணியாற்றி உள்ளார்.

புதிய அதிபராக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அதிபர் மாளிகையில் நேற்று முன்தினம் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் துணை அதிபர் ஜோ பிடேனுக்கு அந்த நாட்டின் மிக உயரிய விருதான ‘மெடல் ஆப் பிரீடம்’ (சுதந்திர விருது) விருதினை அதிபர் ஒபாமா அறிவித்தார். விருது குறித்து பிடேனுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை.

திடீரென நாட்டின் மிக உயரிய விருது அறிவிக்கப்பட்டதால் தன்னையறியாமல் பிடேன் கண்கலங்கினார். அதிபர் ஒபாமா விருதுக்கான பதக்கத்தைப் பிடேனுக்கு அணிவித்தபோதும் அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

நன்றி உரையில் பேசிய பிடேன், இந்த விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை. எனினும் இதனைப் பணிவோடு ஏற்றுக் கொள்கிறேன். அமெரிக்காவின் மிகச் சிறந்த அதிபர் பராக் ஒபாமா. அவரோடு இணைந்து பணியாற்றியதில் மிகுந்த பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in