Last Updated : 23 May, 2017 01:28 PM

 

Published : 23 May 2017 01:28 PM
Last Updated : 23 May 2017 01:28 PM

மேன்செஸ்டர் சோகம்: 22 உயிர்களை பலி வாங்கிய ஒற்றை தீவிரவாதி

இளைஞர்கள், பதின்பருவத்தினர் என 22 பேரது உயிரை பலிவாங்கிய பிரிட்டனின் மேன்செஸ்டர் நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் மனித வெடிகுண்டு தாக்குதல் எனத் தற்போது தெரியவந்துள்ளது. பிரிட்டனின் மேன்செஸ்டர் நகரில் அரியானா கிராண்டே அரங்கில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தபோது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 22 பேர் பலியாகினர், 59 பேர் காயமடைந்தனர். கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலுக்குப் பின்னர் பிரிட்டனில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இதுவே.

இத்தாக்குதல் மனித வெடிகுண்டு தாக்குதல் என மான்செஸ்டர் நகர போலீஸார் தற்போது உறுதி செய்துள்ளனர். மேலும், மனித வெடிகுண்டாக செயல்பட்டு 22 பேரது உயிரைப் பறித்தது ஒரே ஒரு தீவிரவாதிதான் என போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அத்தீவிரவாதி தாக்குதலில் பலியானதையும் போலீஸார் உறுதி செய்துள்ளனர்.

இந்திய தூதரகம் தகவல்:

இதற்கிடையில், மேன்செஸ்டர் தாக்குதலில் இந்தியர் எவரும் பலியாகவில்லை என பிரிட்டனுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று அதிகாலை பிரிட்டனுக்கான இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x