Published : 01 Sep 2018 09:08 AM
Last Updated : 01 Sep 2018 09:08 AM

சிந்து நதி உடன்படிக்கையை முறையாக அமல்படுத்த இந்தியா, பாக். ஆலோசனை

சிந்து நதி உடன்படிக்கையை முறை யாக அமல்படுத்துவது தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் முக் கிய ஆலோசனை நடத்தி உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ம் ஆண்டில் சிந்து நதி உடன்படிக்கை கையெழுத்தானது. இதன்படி ரவி, பீஸ், சட்லஜ் ஆகிய சிந்து படுகையின் கிழக்குப் பகுதி நதிகள் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டன. மேற்குப் பகுதி நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகியவற்றில் 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த உடன்படிக்கையின்படி இருநாட்டு அதிகாரிகளும் ஆண்டு தோறும் சந்தித்துப் பேச வேண் டும். ஆனால் இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்ட விரிசல் காரண மாக பல்வேறு ஆண்டுகளில் பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை.

இந்தப் பின்னணியில் பாகிஸ் தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான பேச்சு வார்த்தை அந்த நாட்டின் லாகூர் நகரில் கடந்த வியாழன், வெள்ளி இரு நாட்கள் நடைபெற்றது. இந்திய குழுவுக்கு பிரதீப் குமார் சக்சேனாவும் பாகிஸ்தான் குழு வுக்கு சையது முகமது மெஹர் அலி ஷாவும் தலைமை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், காஷ்மீரின் செனாப் நதியில் 1,000 மெகாவாட், 48 மெகாவாட் நீர் மின் நிலைய திட்டங்களுக்கு பாகிஸ்தான் ஆட் சேபம் தெரிவித்தது. ஆனால், சிந்து நதி உடன்படிக்கைக்கு உட் பட்டே நீர்மின் நிலைய திட்டங் கள் செயல்படுத்தப்படுகின்றன என்று இந்தியக் குழு கூறியது.

உடன்படிக்கையை முறையாக அமல்படுத்துவது குறித்து இரு தரப்பும் முக்கிய ஆலோசனை நடத்தின. இதில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர் மின் நிலையங்களை பாகிஸ் தான் நிபுணர் குழு பார்வையிட இந்திய தரப்பில் ஒப்புதல் அளிக்கப் பட்டது. இதேபோல பாகிஸ்தான் பகுதி சிந்து படுகையில் இந்திய குழு ஆய்வு செய்ய அந்த நாட்டு அரசு அனுமதி அளித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x