Published : 08 Sep 2018 01:35 PM
Last Updated : 08 Sep 2018 01:35 PM

ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை உயர்வு

ஜப்பானில் வடக்குப் பகுதி தீவான ஹெக்கைடோவை தாக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது

மேலும் இந்த நிலநடுக்கத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதுகுறித்து அரசு சார்பில், "ஜப்பானில் ஹெக்கைடோ தீவில் வியாழக்கிழமையன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 30 ஆக அதிகரித்துள்ளது. காணமல் போனவர்களை கண்டுபிடிக்க தேடும் பணி நடந்து வருகிறது" என்று கூறியுள்ளது.

முன்னதாக ஜப்பானில் வடக்குப் பகுதி தீவான ஹெக்கைடோவை வியாழக்கிழமையன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இந்த நில நடுக்கத்தால் வீடுகள் பல சேதமடைந்தன. பலர் காணாமல் போகினர். 100க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீவின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தற்போது சீரமைப்பு பணி நடந்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x