Published : 02 Sep 2014 09:35 AM
Last Updated : 02 Sep 2014 09:35 AM

பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் விலக ராணுவ தளபதி அறிவுறுத்தல்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகுமாறு அந்த நாட்டு ராணுவத் தளபதி ரஹீல் ஷெரீப் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் நவாஸ் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அவருக்கு எதிராக இரு வாரங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் நவாஸும் ராணுவ தலைமைத் தளபதி ரஹீலும் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று நவாஸ் பதவி விலகுமாறு ரஹீல் அறிவுறுத்தியுள்ளார்.

மூன்று மாதங்களுக்கு நவாஸ் தற்காலிகமாக பதவி விலக வேண்டும். அந்த காலத்தில் சுதந்திரமாக செயல்படும் கமிஷன் அமைத்து பொதுத்தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் துனியா தொலைக் காட்சி நிறுவனம் இந்த செய்தியை ஒளிபரப்பியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x