Published : 20 Sep 2018 09:45 AM
Last Updated : 20 Sep 2018 09:45 AM

கலைஞர்களை நிலவுக்கு அழைத்துச் செல்லும் தொழிலதிபர்!

நிலவுக்கு முதன்முறையாகச் செல்லும் தனிநபர் எனும் பெருமையைப் பெற்றிருக்கும் ஜப்பான் தொழிலதிபர் யுசாகு மேசாவா, தன்னுடன் ஓவியர், இசைக் கலைஞர், திரைப்பட இயக்குநர் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த எட்டு கலைஞர்களையும் இலவசமாகவே நிலவுக்கு அழைத்துச் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறார்.

“பூமிக்குத் திரும்பியதும் அவர்கள் தங்கள் படைப்புகளை உருவாக்குவார்கள். அவர்களது உன்னதமான படைப்புகள் நமக்குள் இருக்கும் கனவுகளுக்கு உத்வேகம் கொடுக்கும்”

என்று உற்சாகமாகப் பேசுகிறார் மேசாவா. ஒரு சமூகத்தின் கனவுக்கு கலைஞர்கள் எவ்வளவு முக்கியம் என்பதற்கு உதாரணம் ஆகியிருக்கிறார் மேசாவா என்று ஜப்பானியர்கள் புகழ்கிறார்கள்.

பணம் மட்டும் இருந்தால் போதாது; ஏன் கலைஞர்களை ஆதரிக்கும் மனமும் வேண்டும் என்று புரிகிறதா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x