Published : 27 Sep 2018 01:15 PM
Last Updated : 27 Sep 2018 01:15 PM

அமெரிக்கா தனியாக நிற்கிறது: ஈரான் விமர்சனம்

ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து சர்வதேச விதிகளை மீறி அமெரிக்கா தனியாக நிற்கிறது என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐ. நா. சபையின் 73வது கூட்டம் நடைபெற்றது.

இதில் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி பேசும்போது, "ஈரான் தனியாக இல்லை. எங்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை உலக நாடுகளின் தலைவர்களே நிராகரித்துள்ளனர். அனைவரும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் அமெரிக்கா தனியாக இருப்பது இன்று தெளிவாகிறது. அமெரிக்கா புதுவிதமான அரசியலை உபயோகிக்கிறது. அது கள அரசியலிருந்து மிகவும் வித்தியாசப்பட்டுள்ளது” என்று விமர்சித்தார்.

இதே பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்ற ட்ரம்ப், ஈரான் அதிபர் ஹசனை, ஊழல் நிறைந்த சர்வாதிகாரி என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.

இந்த நிலையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் ஜான் போல்டான் கூறும்போது, "ஈரான் தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அதற்கான வலையை அவர்கள் கொடுத்தே தீர வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x