Published : 22 Sep 2018 04:03 PM
Last Updated : 22 Sep 2018 04:03 PM

4,000 இணையதளங்களை நீக்கிய சீனா

சமூக வலைதளங்களில் கடுமையான விதிமுறைகளை சீனா பின்பிற்றி வருகிறது அதன்படி கடந்த 3 மாதங்களில் 4,000 இணையதளங்களை நீக்கியுள்ளது.

இதுகுறித்து சினுவா என்ற சீன அரசு ஊடகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில், "கடந்த மூன்று மாதங்களில் தவறான கருத்துகளைப் பரப்பக்கூடிய இணையதளங்கள், சூதாட்டம், மதம், ஆபாசத் திரைப்படங்கள் என சுமார் 4,000 இணையதளங்களை சீனா நீக்கியுள்ளது. கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட இப்பணியில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன” தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சீனாவைப் பொறுத்தவரை சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக வேபீடோ, வீ சேட் போன்றவை சீனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வேபீடோ, வீ சேட் போன்ற  சமூக ஊடகங்களும் அரசு நியமிக்கப்பட்ட குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x