Published : 25 Sep 2018 10:21 AM
Last Updated : 25 Sep 2018 10:21 AM

சுதந்திரம் கோரும் கட்சிக்குத் தடை!

சீனாவிடமிருந்து விடுதலை கோரிவரும் ஹாங்காங் தேசியக் கட்சியை (ஹெச்.கே.என்.பி.) தடைசெய்திருக்கிறது ஹாங்காங் நிர்வாகம். 1997-ல் பிரிட்டனிடமிருந்து ஹாங்காங்கைப் பெற்றுக்கொண்ட சீனா, ‘ஒரே தேசம், இரண்டு ஆட்சி முறைகள்’ என்ற கொள்கையின் கீழ் அதை நிர்வகித்துவருகிறது. இந்நிலையில், முதன்முதலாக ஒரு அரசியல் கட்சி தடைசெய்யப்படுவது இதுதான் முதல் முறை. ஹாங்காங் சமூக அவசரச் சட்டம் எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் இந்தத் தடை கொண்டுவரப்படுகிறது. தேசப் பாதுகாப்பு, பொது அமைதி, பிறரது உரிமைகள் - சுதந்திரத்துக்கான பாதுகாப்பு எனும் பெயரில் கட்சிகள், அமைப்புகளைத் தடைசெய்யும் அதிகாரத்தை அரசுக்கு இந்தச் சட்டம் வழங்குகிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x