Published : 26 Sep 2018 11:40 AM
Last Updated : 26 Sep 2018 11:40 AM
லட்சகணக்கான மக்களை வறுமையிலிருந்து இந்தியா மீட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் 73வது கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ. நா. சபையின் 73வது கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்களிடையே செவ்வாய்க்கிழமை ட்ரம்ப் உரையாற்றினார்.
அதில் ட்ரம்ப் பேசும்போது, "பல லட்சணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்ட வெற்றிகரமான நாடாக இந்தியா உள்ளது. இந்திய கோடிக்கணக்கான மக்களை வறுமை நிலையிலிருந்து நடுத்தர வர்க்கத்திற்கு கொண்டுச் சென்றுள்ளது" என்றார்.
மேலும், அணுஆயுத சோதனைகள் தொடர்பான விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்தத்தில் எந்த தவறும் இல்லை என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
ஈரான் மீது அமெரிக்கா விதித்து வரும் தொடர் பொருளாதாரத் தடைகளை மீறி அந்நாட்டுடன் கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபட ஐந்து நாடுகள் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT