Published : 20 Jun 2019 04:43 PM
Last Updated : 20 Jun 2019 04:43 PM

சிரியாவில் அரசுப் படைகள் தாக்குதல்: 7 குழந்தைகள் உட்பட 14 பேர் பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியதில் 7 குழந்தைகள் உட்பட 14 பேர் பலியாகினர்.

இதுகுறித்து சிரிய கண்காணிப்புக் குழு  தரப்பில், ''சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தினர். இதில் 7 குழந்தைகள் உட்பட பொது மக்கள் 14 பேர் பலியாகினர். 

மேலும் மாரெட் அல் நோமன் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில்  2 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அரசுப் படைகள் மற்றும் ரஷ்யப் படைகள் வேண்டுமென்றே குறிவைத்து பொதுமக்கள், பள்ளிகள், மருத்துவமனைகளைத் தாக்குகின்றன .

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சுமார் 26 மருத்துவ சுகாதார நிலையங்கள் இட்லிப் மாகாணத்தில் தாக்கப்பட்டுள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியிருந்த நிலையில் மீண்டும் பொதுமக்களையும், குழந்தைகளையும் அரசுப் படைகள் தாக்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x