Last Updated : 18 Sep, 2014 03:43 PM

 

Published : 18 Sep 2014 03:43 PM
Last Updated : 18 Sep 2014 03:43 PM

நைஜீரிய கல்லூரியில் குண்டுவெடிப்பு: 20 மாணவர்கள் பலி

நைஜீரியாவின் கல்லூரி ஒன்றில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 20-க்கும் அதிகமான மாணவர்கள் கொல்லப்பட்டனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

நைஜீரியாவின் கனோ மாகாணத்தில் உள்ள கல்லூரியில் புதன்கிழமை மதியம் பயங்கர குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், குண்டுவெடிப்பு நடந்த சில நொடிகளில் கல்லூரியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x