Published : 22 Jun 2019 07:31 AM
Last Updated : 22 Jun 2019 07:31 AM

செல்போன்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்டைக்குள் ‘கொம்பு’ முளைக்கிறது: ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்

செல்போன்கள் மனிதர்களின் வாழ்க்கை முறையை பெரிதும் மாற்றி அமைத்திருக்கின்றன. எல்லா வேலைகளையும் செல் போன் மூலமே செய்துவிடும் அள வுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அதேநேரத்தில் செல் போன்களால் கதிர்வீச்சு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படுவதும் தெரியவந்துள்ளது.

தற்போது அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவலை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர். செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால், நமது நடத்தை மட்டுமன்றி உடலமைப்பும் மாறி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கடற்கரை பல்கலைக் கழக விஞ்ஞானிகள், செல்போன் களை அதிக நேரம் பயன்படுத்து வதால் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய் துள்ளனர். உயிர் விசையியல் (பயோமெக்கானிக்ஸ்) அடிப் படையில் உடலியக்கத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அதில், செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தும் இளைஞர் களின் தலையின் பின்புறம் மண்டைக்குள் கொம்பு போன்ற கூர்மையான எலும்பு வளர்வதை கண்டறிந்துள்ளனர்.

செல்போன்களைப் பயன்படுத் தும் போது அதன் தொடுதிரை யைப் பார்க்க நீண்ட நேரம் தலையை குனிந்து கொள்ள வேண் டியுள்ளது. அதனால், தலையின் முழு எடையும் முதுகெலும்பில் இருந்து தலையின் பின்புறம் உள்ள தசைகளுக்கு மாற்று கிறது. இதனால் எலும்பு தசை நாண்கள், தசைநார்கள் வளர் கின்றன. இதனால் மண்டை ஓட்டுக் குப் பின்புறத்தில் உள்பகுதியில் கொம்பு போன்ற தூண்டுதல் ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் போது நமது உடலமைப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இதை உறுதி செய்வதற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட எக்ஸ்ரேக்களை எடுத்து ஆய்வு செய்துள்ளனர். இதில், இளைஞர் களின் மண்டைக்குள் பின்புறம் கூர்மையான எலும்பு வளர்வதை உறுதி செய்துள்ளனர். செல்போன் அதிக நேரம் பயன்படுத்தும் இளைஞர்கள், தங்கள் தலையின் பின்புறம் கையை வைத்து கவன மாக ஆய்வு செய்தால், உள்ளுக் குள் கொம்பு போன்ற கூர்மை யான எலும்பு துருத்திக் கொண்டு வளர்வதை உணர முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x