Published : 05 Sep 2014 09:47 AM
Last Updated : 05 Sep 2014 09:47 AM

தலிபான் தாக்குதல் 12 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் கஜானி பகுதியில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகம், அருங்காட்சியகம் மீது தலிபான்கள் வியாழக்கிழமை தற்கொலை படைத் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸார் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். 160 பேர் காயம் அடைந்தனர்.

வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை போலீஸ் அலுவல கத்தின் மீது மோதி வெடிக்கச் செய்த அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதேபாணியில் அந்த நகரின் அருங்காட்சியகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இரு இடங்களில் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதல் களில் 8 போலீஸார் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். போலீஸாரின் பதிலடியில் 19 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x