Published : 24 Jun 2019 04:03 PM
Last Updated : 24 Jun 2019 04:03 PM
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் மீது தொடர்ந்து விதிக்கும் பொருளாதாரத் தடையால் எங்கள் எலும்புகள் உடைந்துவிட்டன என்று அந்நாட்டு மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தொடர் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரான் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் சிரம நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரானியர்களில் பலர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதும், ஈரான் அரசு மீதும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஈரான் குடிமகன் ஷிவ கேஷாவர்ஸ் கூறும்போது, ''பொருளாதாரப் போர்தான் இங்கு உண்மை நிலவரம். மக்கள் அனைவரும் பெரும் அழுத்தத்தில் உள்ளனர். ஈரானியத் தலைவரகள் எங்களை வலுவாக இருக்குமாறும், அழுத்தங்களை சகித்துக் கொள்ளுமாறும் கூறியுள்ளனர். ஆனால், எங்கள் எலும்புகள் உடையும் சத்தத்தை ஏற்கெனவே நாங்கள் கேட்டுவிட்டோம்'' என்று கூறியுள்ளார்.
நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருகிறது என்று ஈரான் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த வாரம் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்தார். ஈரான் தொடர்ந்து தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் போர் தொடுக்கவும் தயங்கமாட்டேன் என்று ட்ரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT