Published : 26 Jun 2019 06:00 PM
Last Updated : 26 Jun 2019 06:00 PM

எகிப்தில் தற்கொலைப் படை தாக்குதல்: ஐஎஸ் பொறுப்பேற்பு

எகிப்தின் வடக்குப் பகுதியில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 7 போலீஸார் பலியாகினர்.பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து எகிப்து அதிகாரிகள் தரப்பில், ”எகிப்தின் வடக்குப் பகுதியில் உள்ள சினைய்  பகுதியில் 3 சோதனை சாவடியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு போலீஸ் உயர் அதிகாரி  உட்பட 7 போலீஸார் கொல்லப்பட்டனர்.

பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

எகிப்தில் சமீப ஆண்டுகளாக வடக்கு சினாய் தீபகற்பகத்தை மையமாகக் கொண்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x