

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ இந்தியாவுக்கு வருகை தர இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மைக் பாம்பியோ செய்தியாளர்களிடம் பேசும்போது, ''பொருளாதார ரீதியாக இரு நாடுகளின் உறவும் எவ்வாறு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்கான வாய்ப்பாக இதைப் பார்க்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
பாம்பியோவின் இந்தியப் பயணத்தில் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இம்மாத இறுதியில் பாம்பியோவின் இந்தியப் பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாம்பியோவின் இந்தியப் பயணத்துக்குப் பிறகு இந்தியப் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் சந்திப்புகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.