Published : 11 Jun 2019 04:50 PM
Last Updated : 11 Jun 2019 04:50 PM

தென் சீனாவில் வெள்ளம்: 36,000 பேர் பாதிப்பு

தென் சீனாவில் கடுமையான மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 36,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சீன அதிகாரிகள் தரப்பில், ''சீனாவின் தென் பகுதியில் கடந்த சில தினங்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 32 மாவட்டங்கள் மற்றும்  6 நகரங்களில் வெள்ளம் நீடிக்கிறது. இதுவரை மழைக்கு 16 பேர் பலியாகினர். 12 பேர் மாயமாகினர்.

இந்த வெள்ளம் காரணமாக 36,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1000க்கும் மேற்பட்ட வீடுகள் பழுதடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை பெய்யும் என்று பொதுமக்களுக்கு சீன வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x