Published : 26 Jun 2019 06:05 PM
Last Updated : 26 Jun 2019 06:05 PM
அமெரிக்கா தவறான பாதையை பின்பற்றுவதாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி புதன்கிழமை கூறும்போது, “ நான் இன்று அமெரிக்கர்களுக்கு ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன்.. நீங்கள் தவறான பாதையை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.
பேச்சுவார்த்தை என்பது ஒரு மோசடி. உங்களிடம் ஆயுதம் இருக்கிறது. உங்களை நெருங்க முடியாது ஆனால் எதிராளியை ஆயுதங்களை கீழே போட சொல்லி உங்களுக்கு வேண்டியவற்றைச் சாதித்துக் கொள்வீர்கள் இதுதான் உங்கள் பேச்சுவார்த்தை” என்றார்.
அணுஆயுத சோதனை தொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், கடந்த மாதம் சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. இப்படி தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் மீதும் அதன் முக்கிய தலைவர்கள் மீதும் புதிய பொருளாதாரத் தடையை ட்ரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT