Published : 26 Jun 2019 01:25 PM
Last Updated : 26 Jun 2019 01:25 PM

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்:போலீஸார் பலி

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் போலீஸார் உட்பட மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில், “ பாகிஸ்தானின் தென்கிழக்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள லோலாரி நகரில் காவல் நிலையத்தில்  தீவிரவாதிகள்  புதன்கிழமை  தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தினர்.

இதில் ஒரு போலீஸார் கொலப்பட்டார் தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். போலீஸார் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்றனர்.

இந்தத் தாக்குதகுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். பலுசிஸ்தான் மாகாணத்தை பொறுத்தவரை இது ஒரு இயற்கை வளம் நிறைந்த மாநிலம். இங்கு பிரிவினைவாதிகளுக்கும் பாகிஸ்தான் அரசுக்கு நீண்ட காலமாக மோதல் நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு பாகிஸ்தான் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x