Published : 17 Jun 2019 05:32 PM
Last Updated : 17 Jun 2019 05:32 PM

சவுதி விமான நிலையத்தை மீண்டும் தாக்கிய ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்

சவுதியின் அபா விமான நிலையத்தைத் தாக்கியதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்தி வருகிறது.

இந்நிலையில் சவுதியின் தென் பகுதியில் உள்ள அபா விமான நிலையத்தில் சனிக்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தியதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தத் தாக்குதல் குறித்து இதுவரை சவுதி தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

சவுதி அரேபியாவின் அசிர் மாகாணத்தில் உள்ள அபா விமான  நிலையத்தில் கடந்த வாரம் புதன்கிழமை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சவுதி அரசு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்குப் பதிலடி அளிக்கும் வகையில் ஏமன் தலைநகர் சீனாவில் தாக்குதல்களை நடத்தியது. இந்நிலையில் மீண்டு அபா விமான நிலையத்தை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்கியுள்ளனர்.

ஏமன் போர்

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூருக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இதில் கடந்த சில மாதங்களாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x