Published : 04 Jun 2019 03:42 PM
Last Updated : 04 Jun 2019 03:42 PM
அபுதாபி லாட்டரியில் இந்தியர் ஒருவருக்கு முதல் பரிசாக இந்திய ரூபாய் மதிபப்பில் 18 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்துள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியில் மாதந்தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது.
இங்குள்ள விமான நிலையத்தில் ஆன்லைனில் இந்த லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்துக்கு வரும் இந்தியர்கள் லாட்டரிச் சீட்டு வாங்கி அடிக்கடி அதற்கு முதல் பரிசும் கிடைத்துள்ளன. ஏறக்குறைய 10 இந்தியர்களுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
இந்தநிலையில் சஞ்சய் நாத் என்ற வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியில் சீட்டு வாங்கியுள்ளார். நேற்று குலுக்கல் நடந்த நிலையில் அவருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. பரிசுத் தொகையாக இந்திய ரூபாய் மதிப்பில் 18 கோடி ரூபாய் அவருக்கு கிடைக்கும். இதே லாட்டரியில் வங்கதேசத்தை சேர்ந்தவருக்கும் பரிசு கிடைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT